districts

img

தொழில் முதலீட்டாளர்கள்,முதலீடுகள் மாநாடு

கிருஷ்ணகிரி,டிச.27- தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி ஓசூர் தொழில் முதலீடுகள் மாநாடு சிப்காட் தொழிற்சாலைகள் - கண்டு பிடிப்புகள் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது. நிறுவனங்களில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்து பேசினார்.  முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் வர வேற்றார். கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் தே.மதியழகன், ஆணையர் சினேகா, சாராட்சியர் பிரியங்கா,துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 155 முதலீட்டாளர்கள் மூலம் ரூ. 2825 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெறப்பட்டது. இதன் மூலம் 3 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஹெச்ஐஏ தலைவர் சுந்தரையா, ஹெஸ்டியா தலைவர் மூர்த்தி, ஹோஸ்மியா தலைவர் லோகநாதன், கிரானைட் அசோசி யேஷன் தலைவர் மகேஷ், கிரிடிஷ்டியா தலைவர் விஸ்வநாதன், மாங்காய் பல்பு நிறுவனங்களில் தலைவர் மாதவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ராமமூர்த்தி, தலைமை இந்தியன் வங்கி மேலாளர் சரவணன், சிட்கோ மேலாளர் வள்ளியம்மை, கலந்து கொண்டனர்.மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் சுப்பையா பாண்டியன் நன்றி கூறினார்.