districts

img

கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் கிளைத் தலைவர் மருத்துவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் வினோத் குமார், மூத்த மருத்துவர்கள் ஸ்டான்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.