districts

img

பொங்கலையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கவியரசு கண்ணதாசன் நகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கொசப்பாடி கிராமத்தில், ‘சாதி மத போதை ஊழல் இல்லாத’ தமிழ்நாட்டை உருவாக்கிட  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா நடத்தியது. 25 வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியை சங்கராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் என்.திலகவதி நாகராஜன் துவங்கி வைத்தார், அ. பாண்டலம் ஒன்றிய கவுன்சிலரும் சிபிஐஎம் மாவட்டக் குழு உறுப்பினருமான சி.சசிகுமார், வாலிபர் சங்க தலைவர்கள் எம்.கே.பழனி, சி.சிவகுமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி, வாலிபர் சங்க கிளைச் செயலாளர் எஸ் சுரேந்தர், மாணவர் சங்க செயலாளர் வி.உமாநாத், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, வாலிபர் சங்க கொடியை மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாணவர் சங்க கொடியை பிரகாஷ் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.