திண்டுக்கல், மார்ச் 24- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் சனிக்கிழமையன்று தனது தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கினார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக ளில் வேட்பாளர் அறிமுகம்- செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை யில் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு டன் பெரும் எழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளன. அமைச்சர் ஐ.பெரியசாமி இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக வாக்குச் சேக ரிக்கும் பிரச்சாரத்தை சனிக்கிழமையன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொடுக்க தயங்கி னர். ஆனால், திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வு காணப்பட்டு திண்டுக்கல்லுக்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறை வேற்றப்படும் என்றார். வேட்பாளர் உறுதி மக்களிடையே வாக்குச் சேகரித்து சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், ‘‘கைத்தறி நெசவு ரகங்களை விசைத்தறி மூலம் நெசவு செய்ய அனுமதிக்கப்பட்டதால் கைத்தறி நெசவில் ஈடுபட்டு வந்த கிட்டத்தட்ட 25 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் முடக் கப்பட்டுள்ளது. இந்த வாழ்வாதார முடக் கத்திற்கு பாஜக தலைமையிலான அரசின் கொள்கைகளே காரணம். திண்டுக்கல்-காரைக்குடி, திண்டுக்கல்-சபரிமலை வரையிலான ரயில்வே திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றவும், மதச்சார்பின் மையை பாதுகாக்கவும், மக்களின் துன்ப, துயர வாழ்க்கை நிலையை மாற்றவும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமையும். அப்போது மக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் நாடாளுமன்றத்திலே குரலெழுப்புவேன். அதற்கு நீங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளராகிய என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என வாக்குகள் சேகரித்தார்.
சிலுவத்தூர் சாலையில் துவங்கிய பிரச்சாரம் எஸ்எம்பி பள்ளி,குமரன் திருநகர், அண்ணா நகர், விவேகானந்தா நகர், காட்டாஸ்பத்திரி, ஆர்த்தி தியேட்டர் ரோடு, ஒய்எம்ஆர் பட்டி, பஸ் ஸ்டாண்டு, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, மெங்கில்ஸ் ரோடு, பெல்பர்க் ரோடு, என்விஜிபி தியேட்டர் ரோடு, நாகல் நகர் பகுதியில் முடிவடைந்தது. குமரன் திருநகர் உள்ளிட்ட பல பகுதியில் பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் மாலை அணி வித்தும் ஆதரவு கொடுத்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்ட மன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில் குமார். திமுக திண்டுக்கல் நகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணைமேயரும் திமுக திண் டுக்கல் மாநகர் துணைச் செயலாளருமான ராஜப்பா, மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வ ராகவன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.பி. மணிகண்டன், காங்கிரஸ் மாவட்டச் செயலா ளர் துரைமணிகண்டன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலாளர் மைதீன் பாவா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராம லிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாநக ரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் சரத்குமார் மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றியக்குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.