districts

img

தன்னிச்சையாக இயங்கும் எஸ்பிஐ பொதுத்துறை  நிறுவனத்தின் துணையோடு  தேர்தல்

தன்னிச்சையாக இயங்கும் எஸ்பிஐ பொதுத்துறை  நிறுவனத்தின் துணையோடு  தேர்தல் பத்திரத்தில் ஊழலை செய்த,  மோடி பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் திங்களன்று (மார்ச் 11), பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், இ.மோகனா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேலு, எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம் ஆகியோர் பேசினர். பின்னர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று பொன்னேரி எஸ்பிஐ வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.