districts

img

ஓய்வூதியர் நல சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து கழகங்களையும் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஓய்வூதியர் நல சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் விளக்க வாயிற்கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு மண்டல பொதுச் செயலாளர் வி.சீனிவாசன் தலைமையில் வியாழனன்று (ஜன. 4) நடைபெற்றது. இதில் போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.இமயவர்மன், சிஐடியு துணைப் பொதுச் செயலாளர்கள் நாராயணன், மாயக்கண்ணன், மண்டலத் தலைவர் என்.நந்தகோபால், ஐஎன்டியுசி தலைவர் ராமநீராலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.