காஞ்சிபுரம்,நவ.30- கனமழை காரணமாக செம்ப ரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,000 கன அடியை கடந்த நிலையில், அணை யிலிருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக மேலும் அதிகரித்து ள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பி டிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,098 கன அடி யாக உள்ளது. இதனால், 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமானது, தற்போது 22.53 அடியை எட்டியுள்ளது. புதனன்று , செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,888 அடியாக இருந்த நிலையில், இரவு பெய்த கனமழை காரணமாக 3,098 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம் பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3,256 கன அடியாகும் இதனால், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலி ருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு, தற்போது விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், 6,000 கன அடியாக உயர்த்தி மதியம் 4000 கன அடியாக திறக்கப்பட் டுள்ளது. இதனால் ஆற்றின் கரை யோரம் உள்ள தாழ்வானப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளி யிட்டுள்ளது. புகார் அளிக்க மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்.