சென்னை,ஜன.31- குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற் காக வழங்கப்பட்டு வரும் உணவு கூட்டுச் செலவினத் தொகை ரூ.2.39 என உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு அரசால் செயல்படுத் தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தை களுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உண கூட்டுச் செலவினத் தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கான உணவு கூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவின படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ.1.33 என்றும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக் கான செலவினம் 46 பைசா எனவும், எரிபொருளுக்கான செலவினம் 60 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதாவது, பருப்பு பயன்படுத் தும் நாட்களில் காய்கறிகளுக்கு 96 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறிகளுக்கு ரூ.1.10 காசும் என வழங்கப்பட்டு வந்த உணவு கூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.1.33 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்க ளில் 30 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் உப்பு மற்றும் தாளிதப் பொருட்களில் 45 காசும் என வழங்கப்பட்டு வந்த உண கூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்க ளும் 46 காசாக உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் எரிபொருளுக்கு 26 காசும் என வழங்கப்பட்டு வந்த உண கூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் 60 காசாக உயர்த்தி வழங்க ப்பட்டுள்ளது. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் மொத்தமாக ரூ.1.52 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் மொத்தமாக ரூ.1.81 காசும் என வழங்கப்பட்டு வந்த உணகூட்டுச் செலவினம் இனி அனைத்து நாட்களும் ரூ.2.39 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, உண கூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களில் உள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகள் சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார் கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.