districts

img

புதுவையில் எய்ட்ஸ் நோயாளிகளின் உதவித் தொகை உயர்வு

புதுச்சேரி,டிச.1- புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயாளிகளின் மாதாந்திர உதவித் தொகை ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம்   100 அடி சாலையில் அமைந்துள்ள தனியார்  ஓட்டலில் அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர்  ரங்கசாமி கலந்து பேசினார் .  அப்போது, “புதுச்சேரி அரசு வழங்கி வரும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 2,000 இருந்து ரூ.3,000 ஆக உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார் .  உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்லூரி மாணவர்களுக்கிடையே மாநில அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எச்ஐவி பரிசோதனை மையங்களில் சிறந்த ஐந்து நட்சத்திர தரச் சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு சமுதாய நல்வழி மையம் கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி  மையம் மற்றும் காரைக்காலில் உள்ள மூன்று  பரிசோதனை மையங்களை சார்ந்த ஊழியர்க ளுக்கும் முதல்வர்   ரங்கசாமி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர்  செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சம்பத், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர்  சித்ராதேவி மற்றும் அதிகாரிகள் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.