districts

img

ஐசிஎஃப் - கொளத்தூர் ஜிகேஎம் காலனி உள்ளிட்ட 3 பாலங்களை ஏப்ரல் மாதத்திற்குள் திறக்க திட்டம்

சென்னை, பிப்.25- பெருநகர சென்னை மாநகராட்சி யின் திரு.வி.க நகர், அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கம் மண்ட லத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடை பெறும் மேம்பாலப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மாநக ராட்சி அறிவித்துள்ளது.
ஓட்டேரி நல்லா  உயர்மட்ட பாலம் 
மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தங்குதடை யற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக் கும் வகையிலும் மாநகரின்  முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகு திகளில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர் மண்டலம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே ஏற்க னவே இருந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு ரூ.43.46 கோடியில் புதி தாக உயர்மட்டப் பாலம் அமைக் கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.   இத்துடன் மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதேபோல் புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் டாக்டர். அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரை மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொளத்தூர்  ரயில்வே மேம்பாலம் 
அண்ணாநகர் நகர் மண்ட லத்தில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சந்திக்கடவு எண்.  1க்கு மாற்றாக வடக்கில் கொளத் தூர் பிரதான சாலையையும் தெற்கில்  ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் இருவழி மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.61.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மேம்பாலமானது கொளத்தூர் பகுதியை அண்ணா நகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும். இம்மேம்பாலத்தினால் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர், கொரட்டூர், பாடி,  ஐ.சி.எப். அண்ணா நகர் மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் மிகவும் பயன டைவர்.இம்மேம்பாலம் சுமார் 500மீ நீளம் மற்றும் 8.50மீ அகலமுடையது. ஐ.சி.எப். பகுதியில் சாய்வுதளம் அமைக்கப்பட்டு, சாலைப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கொளத்தூர் பக்கம் சாய்வுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆகாய நடைபாலம் 
கோடம்பாக்கம் மண்டலத்திற் குட்பட்ட தி.நகர் பேருந்து நிலையத் திலிருந்து மாம்பலம் ரயில் நிலை யத்திற்கு போக்குவரத்து நெரி சலின்றி மக்கள் பயனிக்க ரூ.26.00 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் நடைமேம்பாலம், பேருந்து நிலைய படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி ரயில்வே நிலைய இணைப்பு, ரங்கநாதன் தெருவில் படிக்கட்டுகள் ஆகியவை முடிக் கப்பட்டுள்ளது. தற்போது இர யில்வே நிலையம் அருகில் மின் தூக்கி அமைக்கும் பணி, விளக்கு கள், சிசிடிவி, பேருந்து நிலையம் மற்றும் இரயில் நிலையம் அருகில் ஒப்பனை அறைகள், nஜனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.  மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மூன்று மேம் பாலப் பணிகளும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.