districts

img

பழங்குடியினர் வீடுகள் திறப்பு விழா

திருவண்ணாமலை, டிச.14- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் பேரூர் வடுகன் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் பழங்குடியின மக்க ளுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில், அரசு சார்பில் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தோழர் சங்கரய்யா நகர் அதைத் தொடர்ந்து பழங்குடியினர் வீடுகள் திறப்பு, குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா நகர் பெயர் பலகை திறப்பு, கட்சிக் கொடி ஏற்றுதல் என முப்பெரும் விழா பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் என். சேகரன் தலைமையில் நடைபெற்றது. இரா.இராஜசேகரன் வரவேற்றார். பழங்குடியினர் இல்லங்களை கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் செங்கொடியை ஏற்றி வைத்தார். தோழர் சங்கரய்யா நகர் பெயர்ப்பலகை மலைவாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் இரா. சரவணன் திறந்து வைத்தார். பேரூராட்சித் தலைவர் வேணி ஏழு மலை குத்து விளக்கு ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மா.கௌதம் முத்து (சிபிஎம்), சிவராமன் (திமுக), துளசி (அதிமுக), மார்க்சிஸ்ட் கட்சியின் வந்த வாசி வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.