ராணிப்பேட்டை, நவ. 25 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க துவக்க விழா மேலபுலம்புதூர் ஊராட்சி ஒன்றிய நுகர் பொருள் கட்டிடம் அருகில் சனிக்கிழமை (நவ. 25) சங்கத்தின் தலைவர் கே. வேதாச்சலம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் ஆர். சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் ஈ. முத்துக்குமார் கொடியேற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. துரைராஜ் பெயர் பலகை திறந்து வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் அ. தவராஜ், ஆட்டோ சங்க மாநில துணைத் தலைவர் கே. ெஜயவேல், விவசாய சங்க தலைவர் எம். ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இறுதியாக சுமை பணி சங்க மாவட்ட குழு உறுப்பினர் கே. சிவகுமார் நன்றி கூறி முடித்து வைத்தார். நுகர் பொருள் கட்டிடத்தில் மரக்கன்றுகளை தலைவர்கள் நட்டனர்.