districts

img

முதியோர் பராமரிப்பு மையம் துவக்கம்

சென்னை, அக். 7- நலிந்த பிரிவில் உள்ள மக்களுக்கு சேவை செய் யும் நோக்கத்துடன், முதி யோர்களுக்கான சர்வதேச தினத்தில்  சென்னையில் உள்ள ஆர்எம்டி கேர்  நிறுவனத்தின் சார்பில்  முதியோர் பராமரிப்பு  மையம் தொடங்கப்பட்டுள் ளது. இந்த புதிய கிளை துவக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அரிமா சங்கத் தின் உதவியுடன் ஆதரவற்ற  முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்  தமிழ் நாடு திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவர் டாக்டர்.பி.ஜோதிமணி, உலக அமைதி மற்றும் நட்பு கவுன்சில் தலைவர் மணி லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  ஆர்எம்டி நிறுவனர் டாக்டர். ரிபப்ளிகா  ஸ்ரீதர்பேசுகையில் “இன்றைய உலகில் அதிக உதவி தேவைப்படும் நிலையில் மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களுக்கான பராமரிப்பு சேவையை தொடங்குவதில் மகிழ்ச்சி யடைகிறோம் என்றார். பக்கவாதம், அல்சைமர்,  டிமென்ஷியா, புற்றுநோய் மற்றும் படுக்கையில் இருக்கும் மூத்த  குடிமக்க ளுக்கு தேவையான உதவி களை புதிய மையம் செய்யும். அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்த மையத்தின் படுக்கை வசதியை  500 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மையத்தை ஸ்ருதி ஸ்ரீதர்,  இம்மானுவேல்,  ஸ்ரீகுமார், விஷால் ஆகியோருடன் ஆர்.எம்.டி மருத்துவக் குழு  ஒருங்கிணைந்து  செயல் படுத்த உள்ளது.