விழுப்புரம் அருகே ஆசாரம்குப்பத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா கிளைத் தலைவர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் சங்க கொடியை ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஆர் .தாண்டவராயன், மாவட்டச் செயலாளர் ஆர்டி.முருகன், பொருளாளர் பி.சிவராமன், துணைத் தலைவர் வி.கதிரேசன், வட்டச் செயலாளர் ஏ.நாகராஜன், கிளைச் செயலாளர் கே.ஆனந்தராஜன், ஆர்.ராமலிங்கம், கே.பாலமுருகன், கிளை பொருளாளர் ஏ.சி.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.