இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நினைவு கல்வெட்டு திறப்பு விழா மத்திய சென்னை மாவட்டம் அம்பத்தூர் பகுதிக் குழு சார்பில் பாடியில் மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கல்வெட்டை சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்து தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார். இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், அம்பத்தூர் பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி, ஏ.எஸ்.கண்ணன் (சிபிஐ), ஜி.மூர்த்தி (சிபிஎம்), தாமோதரன் (மதிமுக), சி.கனகராஜ் (ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நடைபயிற்சியாளர் மற்றும் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.