districts

2ஆம் நிலை 3ஆம் நிலை நகரங்களில் வீட்டுவசதி கடன் வழங்க இலக்கு

சென்னை,அக்.26- தமிழகத்தில் 2ஆம் நிலை 3ஆம் நிலை நகரங்களில் வீட்டுவசதி கடன் வழங்குதில் தீவிரம் காட்டுவதாக ஐஐஎப்எல் வீட்டுவசதி கடன் நிறுவனத்தின் மண்டல விற்பனை பிரிவு மேலாளர் எஸ்.கிருஷ்ண கிஷோர் கூறியுள்ளார். ஆன்லைன் வாயிலாக செய்தியாளர்களி டம் பேசிய அவர்,  தமிழகத்தில் நாங்கள்  28 கிளைகளை கொண்டு  செயல்படு கிறோம். 4 ஆயிரத்தி 250க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 923 கோடி கடன் வழங்கியுள்ளோம்.  கடன் வழங்கும் நடைமுறைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கிய முதல் நிறுவனம் ஐஐஎப்எல் ஆகும். ஆட்டோ ஓட்டுநர்கள், டீ மாஸ்டர்கள், டீ கடை உரிமையாளர்கள் உள்பட அமைப்புசாரா தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கும் மாதச் சம்பளம் வாங்கி முறையாக வருமான வரி செலுத்து வோர் என  தகுதியுள்ள அனைருக்கும் கடன்  வழங்கி வருகிறோம். திருச்சி,சேலம் கோபிசெட்டி பாளையம் போன்ற இரண்டாம் நிலை 3ஆம் நிலை நகரங்களில் உள்ள மக்களை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை கடன் தருகிறோம்.   வாடிக்கையாளர்களை பொறுத்து கடன் தொகை மாறும்.  முதல் தடவை வீடு  வாங்குவோருக்கு பிரதமரின் அனை வருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் வழங்குகிறோம். தமிழ கத்தில் கடந்த 3 ஆண்டுகளில்  ஏற்கனவே  ரூ.27 கோடி மானியத்தை 1100 வாடிக்கை யாளர்களுக்கு வழங்கியுள்ளோம்.  சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறோம். இதனை அவர்கள் 7 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம்.  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் குறைந்த வருமான பிரிவினருக்கு   சென்னை, திருப்பூர், கோவை, மதுரை சேலம் ஆகிய இடங்களில் கட்டித்தரும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் பயனாளிகளுக்கு கடன் வழங்கி வருகி றோம்.  தமிழகத்தில் இந்த குடியிருப்பு களை வாங்கும் 300 முதல் 400 வாடிக்கை யாளர்களுக்கு இதுவரை  கடன் வழங்கி யுள்ளோம் என்றும் கிருஷ்ண கிஷோர் கூறினார்.