திருவள்ளூர், ஆக 10-
பொன்னேரி அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் மாயமான காவலாளி கழிவுநீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் புதனன்று (ஆக-9), காலை வழக்கம்போல் பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பாத தால் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் பணிபுரிந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின், திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் சடலமாக மிதப்பதை கண்ட குடியிருப்பின் பணி பெண் ஒருவர் இது குறித்து கட்டிட உரிமையாளரிடம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் வியாழனன்று (ஆக-10), நிகழ் விடத்திற்கு வந்த பொன்னேரி காவல் துறையினர், பொன்னேரி தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, கழிவுநீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணி திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலையா? என்பது குறித்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.