districts

img

நூலகம், அறிவுசார் மையம் திறப்பு

விழுப்புரம்,ஜன.5- விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தில் ரூ. 2.5 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை வெள்ளிக்கிழமை (ஜன.5) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை  பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நகராட்சி நகர்மன்ற தலை வர் தமிழ்செல்வி, நகராட்சி ஆணையர் ரமேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். கள்ளக்குறிச்சி அதேபோல் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை. திருக்கோவிலூர் ஆகிய நகராட்சி களில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  வசந்தம் கார்த்திகேயன் ஆகி யோர் பங்கேற்றனர்.