districts

வங்கிகணக்கில் ரூ.10 லட்சம் சுருட்டிய வாலிபர்

சென்னை,பிப்.17-  விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்து வருபவர் பத்ரி நாராயணன். அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அவர் தனது தாயார் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த  டிசம்பர் மாதம் குடும்பத்து டன் சென்னை வந்தார்.  இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம்  எடுக்க சென்ற அவர் ரகசிய குறியீட்டு எண்ணை 2 முறை தவறாக  பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது ஏ.டி.எம். கார்டு பிளாக் செய்யப் பட்டது. சிறிது நேரத்தில் பத்ரி நாராயணனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம வாலிபர் வங்கி  சேவை மையத்தில் இருந்து  பேசுகிறேன் “வருமான வரி அட்டையை உடனடி யாக புதுப்பிக்க வேண்டும்”  என்று கூறி பத்ரி நாரா யணனின் ஏ.டி.எம். கார்டு விபரங்களை கேட்டார். தனது ஏ.டி.எம். கார்டு பிளாக் செய்யப்பட்டதால் இதை  உண்மை என்று நம்பிய அவர் தனது கார்டு எண் விபரங்களை அவரிடம் கூறினார். இதையடுத்து அவரது செல்போனுக்கு “லிங்க்” ஒன்றையும் மர்ம நபர் அனுப்பி வைத்தார். அந்த “லிங்க்கை” பயன் படுத்திய சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக மொத்தம்  ரூ.10 லட்சம் பணம் எடுக்கப் பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது வங்கி கிளைக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்  பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.