திருவள்ளூர், ஜன 20- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் தீர்க்கும் ஒரே ஆதார மாக இருப்பது பழவேற் காடு அரசு மருத்துவமனை ஆகும். நாள் தோறும் இங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் சிகிச்சை பலனின்றியும், மேல் சிகிச்சைக்காக பொன்னேரி மற்றும் சென்னை மருத்துவமனை களுக்கு அனுப்பப்பட்டும் பலர் வழியிலேயே உயிரி ழக்கும் பரிதாபமான நிலை நீடிக்கிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் மருத்து வர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் வெள்ளியன்று (ஜன 19), காலை 9.30 மணி வரை மருத்துவர்கள் இல்லாமல் பள்ளி மாணவர் கள், குழந்தைகள் பெரிய வர்கள் என சிகிச்சைக்காக வந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மருத்துவர் இருக்கை யில் அமர்ந்து செவிலி யர்களே சிகிச்சையளிப் பதாக நோயாளர்கள் தெரி வித்தனர். அவசர சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் இல்லாமல் நோயாளர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதாரத்துறை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.