சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5, 6 வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் எழும்பூர் பகுதி கே.பி.பார்க் பகுதியில் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரத்தை ஆ.பிரியதர்ஷினி எம்.சி., தொடங்கி வைத்தார்.