சென்னை,டிச24- 11 ஆண்டுகளுக்கு முன்னர் மெட்ரோ ரயில் பணிகளுக்காக கையகப்படுத்த ஷெனாய் நகர் திரு.வி.க பூங்கா பணி களை சீரமைப்பதில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவ தாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். சென்னை ஷெனாய் நகர் திரு.வி.க பூங்கா சுமார் 8.8 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ள இந்த பூங்கா 11 ஆண்டுகளுக்கு முன் மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் கையகப் படுத்தபட்டது. திரு.வி.க பூங்காவில் பூமிக்கு அடி யில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கியபோது பொதுமக்கள் இந்த பூங்காவை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு பூங்கா பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களோடு, எழில் மிகு தோற்றத்தில் நவீன முறையில் சீரமைக்க படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இத்தனை ஆண்டு கள் கழித்தும் பூங்கா பொது மக்கள் வசம் ஒப்படைக்க வில்லை என்பது அந்த பகுதி மக்களின் வருத்த மாகஉள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் குமுறிய மக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள னர். பூங்கா தொடர்பான வழக்கில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மீட்டுருவாக்க பணிகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை யிட்டு தங்களின் கோரிக்கை களுக்கு தீர்வு காண வேண்டும் என தங்கள் எதிர்பார்ப்பை தெரி வித்துள்ளனர்.