‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த அனிதாவின் நினைவு நாளான வெள்ளியன்று (செப்.1) தென்சென்னையில் பல்வேறு கல்வி நிலையங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக விருகம்பாக்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.