சிதம்பரம், ஜூலை 13-
சிதம்பரம் அருகே உள்ளது கண்ணங்குடி ஊராட்சி. இங்கு 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. கடந்த 3 ஆண்டு களாக முறையாக பராமரிக்கப்படாததால் நூலகத்தில் இருந்த புத்த கங்கள் பெரும்பகுதி களவு போனது. தள வாட பொருட்கள் சேத மடைந்தது. கட்டிடம் சிதில மடைந்து நீண்ட நாட்கள் பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ள தால், குடிகாரர்கள் வந்து போகும் இடமாக மாறிவிட்டது.
எனவே, இந்த நூல கத்தை புதுப்பித்து தரவேண்டும் என்று மாணவர்கள், இளை ஞர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கண்ணங் குடி ஊராட்சி மன்றத் தலை வர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில்,“ சிலர் கிளை நூலகம் நமக்கு அறிவை கொடுக்கக் கூடியது. என்ற புரிதல் இல்லாமல் செயல்பட்டதால் இது போன்ற உள்ளது. தற்போது கிளை நூலகத்தை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 3 லட்சத்தில் சீரமைத்து தர திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. அனு மதி கிடைத்தவுடன் கிளை நூலகம் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வரப்படும்”என்றார்.