districts

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலை திறப்பு

சிதம்பரம், மார். 12-   சிதம்பரம் நகரத்தில் தொடர்ந்து  4 வீதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.   அதேபோல் திருவிழா காலங்க ளில்  போக்குவரத்து நெரிசல் அதி கமாக  இருந்தது.  இதனால்  சிதம்பரம்  அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு  அவசர ஊர்திகள்  செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.  போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.  சிதம்பரம்  தில்லை அம்மன் வாய்க்கால் கரையில்  வெளிவட்டச் சாலை  அமைக்க  எம் ஆர் கே பன்னீர்செல்வம்  முயற்சிகளை மேற்கொண்டார்.  இதனையொட்டி  இதற்கு ரூ 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.   இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை தில்லையம்மன் ஓடை பகுதியில் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார்  தமிழக வேளாண் மற்றும் உழவு நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சிறு பான்மை  நலத்துறை அமைச்சர்  செஞ்சி மஸ்தான்  ஆகி யோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்.   இதில்  கூடுதல் ஆட்சியர் சரண்யா,  சிதம்பரம்  சார் ஆட்சி யர்  ராஷ்மிராணி, காட்டு மன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பி னர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.