சென்னை, மார்ச் 7- சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட ஆர்.கே. நகர் 41ஆவது மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் மணலி சாலை யில் ரூ12 லட்சம் மதிப்பீட் டில் புதிய பேருந்து நிலை யம் நிழற்குடை அமைப்பது, அண்ணா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ரூ9.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதி கள் கொண்ட மைய மாக மேம்படுத்துவது, எம்.ஜி. ஆர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டுப் பூங்காவில் ரூ9 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைப்பது ஆகிய 3 திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபி னேசர், மண்டலக் குழு தலை வர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா திமுக பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வட்டச் செயலாளர் தேவன், சசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் பகுதிச் செயலாளர் வெ. ரவிக்குமார், நிர்வாகிகள் விஜய், ஜோதிபாசு, திரு முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.