districts

முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை அகற்றிட குழுக்கள் அமைப்பு

சென்னை, ஏப்.27- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் முறை யற்ற கழிவுநீர் இணைப்புகளை கண்டுபிடித்து அகற்றிட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏதேனும்  கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றிட மாநகராட்சி உதவி, இளநிலைப் பொறியாளர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவானது, தங்களது வார்டுகளில் தினமும் பிரத்யேகமாக ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை அன்றே உடனடியாக அகற்றிடவேண்டும். ரூ.2 லட்சம் வரை அபராதம் இக்குழுவின் சார்பில் மேற்கொள்ள ப்படும் களஆய்வுகளில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் சாதாரணக் கட்டடங்களில்குடியிருப்புகளுக்கு ரூ.5 ஆயிரமும், வணிக வளாகங்களுக்கு ரூ.10  ஆயிரமும், சிறப்பு கட்டடங்களில் குடியிருப்பு களுக்கு ரூ.25 ஆயிரமும், வணிக வளாகங்களுக்கு ரூ.50 ஆயிரமும், அடுக்கு மாடி கட்டடங்களில் குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களுக்கு ரூ.2  லட்சமும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு ககன்தீப் சிங் பேடி தெரிவித் துள்ளார்.