கிருஷ்ணகிரி,ஆக. 31- கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் ஊராட்சி பால்சுனை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் அங்கு வசிக்கும் வேலு என்ப வர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை அங்கிருந்து சொந்த கிராமமான பால்சுனைக்கு கொண்டு சென்ற போது, அங்குள்ள மாற்று சமூகத்தினர் தங்கள் கிராமமான புலுகன் கொட்டாய் சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்துள்ளனர். இதையடுத்து பாண்டிச் சேரி திருவண்ணாமலை சாலையில் சடலத்தை வைத்து இருளர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் புலு கன்கொட்டாய் மாற்று சமூகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சட லத்தை அந்த வழியாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, சட லத்தை எடுத்துச் சென்று அங்குள்ள பொது மயானத்தில் எரியூட்டினர்.