districts

img

ஆளுநர் என்பது அடையாளப் பதவியே!

புதுதில்லி, நவ. 24 - “ஆளுநர்கள் மசோதாக்களை நிரா கரித்தால் அவற்றை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், நிராகரிப்பதாக மட்டும் கூறி எந்த மசோதாவையும் நிலு வையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கை கடந்த நவம்பர் 10 அன்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வானது, பஞ்சாப் சட்டப்பேரவை அமர்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை” என்று அதிரடியாக தெரிவித்தது. இந்நிலையில், அந்த  தீர்ப்பின் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் உச்சநீதிமன்றம் மேலும் கூறியிருப்பதாவது: 

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இயற்றும் மசோதாவை ஆளுநர் தடுத்து வைப்பது, சட்டமன்றச் செயல்முறை யை தடம் புரளச் செய்யும். எந்தக் காரண மும் இல்லாமல் ‘ஒப்புதல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது’ என்று வெறுமனே அறிவிப்ப தன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தை முடக்குவது, நாடாளுமன்ற ஆட்சி  முறையின் அடிப்படையிலான அரசிய லமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது. 

ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதில் திருத்தம் செய்ய வலியுறுத்தலாம். அதுதொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. நிராகரிப்பதாக மட்டும் கூறி எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது. 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே உண்மையான அதிகாரம் உள்ளது. ஆளுநர் என்பவர் அடையாள தலை வர் மட்டுமே. மாநில அரசும், அமைச்சர்களும் சொல்வதன்படிதான் ஆளுநர் செயல்பட முடியும். தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவராக ஆளுநருக்கு சில அரசிய லமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள் ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங் களால் சட்டமியற்றும் வழக்கமான போக்கைத் தடுக்க இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. அதோடு, சட்டப் பேரவைக் கூட்டத்தின் செல்லுபடியாகும் நிலையை தீர்மானிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை. கூட்டத்தொடரில் சந்தேகம் எழுப்பும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்” இவ்வாறு உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.