சென்னை, ஆக. 10-
மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அவற்றை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாய் மற்றும் சகோதரனுடன் நடந்து சென்ற ஒரு பள்ளிச் சிறுமியை, பசு மாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியது. மாடுகளின் கால்க ளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட சிறுமியை, இரண்டு மாடுகள் கடுமை யாக தாக்கியது. தொடர்ந்து அருகில் இருந்த ஒரு வர் மாட்டை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசு மாடு பள்ளி குழந் தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பொதுமக்கள் உதவி யுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன் குழந்தையைப்போல இனி வேறு எந்தக் குழந்தையும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது, சென்னை பகுதி யில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப் படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. வீதி களில் சுற்றித்திரியும் மாடு களை பிடித்து சென்று பெரம்பூர் மற்றும் புதுப்பேட்டை பகுதிகளில் வைக்கிறோம். ஒரு மாட்டிற்கு 2,000 ரூபாய் என அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அதன் உரிமையாளர்கள் அந்த அபராத தொகையை செலுத்திவிட்டு, சம்ப வத்தை கருத்தில் கொள்ளா மல் மீண்டும் அவ ற்றை தெருக்களில் சுற்ற விடுகின்றனர் என்றார்.
மாடுகள் தொடர்ந்து இவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்தால் அவற்றை கையகப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபடும். எனவே மக்கள் நலன் கருதி மாட்டின் உரிமையாளர்கள் இனி இதுபோன்று நடக்கா மல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார்.