districts

img

ஐசிஎம்ஆர் ஊழியர்கள் தர்ணா

அம்பத்தூர், டிச. 28- ஓய்வுபெற்ற பின் வழங்க வேண்டிய பணப்பலன்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கக் கோரி ஐசிஎம்ஆர் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனமான ஐசிஎம்ஆர் உள்ளது. இங்கு நிரந்தரத் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் நிரந்தர ஊழியர்க ளில் எஸ்.ஏ.ரவீந்திரா, டி.ரவிச்சந்திரன், டி.முருகன், ஆர்.அரிகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, கடந்த 1 ஆண்டுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றனர். ஆனால் அவர்களுக்கு கிராஜுட்டி , விடுப்பு சரண்டர், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் பணப்பலன்களை உடனே வழங்கக் கோரி அந்த்ச் நிறுவனத்தின் வாயிலில் வியாழனன்று (டிச. 28) தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஆதரித்து ம.பூபாலன் (சிஐடியு), முரளிதரன் (எச்விஎப்),  ஜெயமூர்த்தி (ஓசிஎப்), க.விஜயசீலன் (ஏஐடிஇஎப்) ஆகியோர் பேசினர்.