districts

img

நாளைய சமூகத்தை மாற்றும் வினை ஊக்கியாக பெண்கள்

சென்னை, மார்ச் 7- மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை எத்திராஜ் கல்லூரியில் எதிர்கால நிரந்தர முன்னேற்றத்திற்கு பெண்கள் வினை ஊக்கிகளாக இருக்கின்றனர் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை (மார்ச் 7)  தொடங்கியது. இந்த கருத்தரங்கில் நடிகை யும், நடன இயக்குநருமான பத்மவி பூஷன் விருது பெற்ற பத்மா சுப்பிர மணியத்திற்கு விருது வழங்கப் கட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அரசுச் செயலாளர் ஜோதி நிர்மலா பெரியசாமி, பெண் குழந்தைகள் நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ரொம்ப பெரிய லட்சியங்களை அடைய முடியும். பெண்கள் வினை ஊக்கிகளாக இருக்க வேண்டும். இந்த சமூகத்தின் தொடர் வளர்ச்சியை பார்த்து வருகிறோம். பெண்கள் உயரங்களைத் தொடும் போது தடைகள் வரத்தான் செய்யும். ஒரு பெண் படித்து முன்னேறும் போது சமூகத்தில், குடும்பத்தில் உள்ள தடைகளை உடைத்து முன்னேற வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தையும் நாளைய சமூ கத்தை மாற்றும் வினை ஊக்கியாக இருப்பார்கள் என்பதைச் சொல்லும் போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் வரவேற்பு உன்னதமாக இருந்தது. உடலளவில் பலவீனமாக இருப்ப தாக நினைக்கக் கூடாது. நேர்மையின் சக்தியால், உடம்பின் திறமையால் நம்மை வலிமையானவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வலிமை யான பெண் என்பது, உடலால் வலிமை என்பது தேவையில்லை.  மனதால் வலிமையாக இருந்தால் போதும். மன வலிமை, மன உறுதி ஒரு பெண்ணிற்கு வந்தால், ஆணிற்கு நிகராக அல்லாமல், ஆணிற்கு ஒரு படி அதிகமாகவே அவர்களால் வலிமையுள்ளவளாக மாற முடியும் என்பதை மகளிர் தின செய்தியாக கூறிக்கொள்ள இருக்கிறோம். அப்படி முன்னேற்றம் வரும்போது ஆண்கள் மட்டும் அல்லாமல், பெண்கள் சார்ந்த சமுதாயமே பிடித்து இழுக்கப் பார்க்கிறது. அது உண்மைதான். அவள் நல்ல படிநிலைகளை அடையும்போது, பற்பல செய்திகளைச் சொல்லி அவளைப் பின்னோக்கி இழுக்கும் சக்திகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி சொல்லும்போது அவளின் மனவலிமையை குறைக்கும் சக்திகளும், முயற்சியும் அங்கே எடுக்கப்படுகிறது. ஆனால் இதை எல்லாமல் கண்டு கொள்ளாமல், அவள் தன் இலக்கு ஒன்றையே நினைத்து தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும், சமூகத்தைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றுவதை குறிக்கோளாக வைத்துக் கொண்டால், நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் வெற்றிகர மான பெண்ணாக உருவாக முடியும் என்பதை இங்கே மகளிர் தின செய்தியாகக் கூறிக் கொள்ள விரும்பு கிறேன்” என்றார்.