வேலூர், மார்ச் 25 - வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வே.ரா.சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அமைச்சர் துரை முருகன் சட்டமன்ற உறுப்பி னர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், கே.தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் செய்தியாளர் களிடம் பேசுகையில், கடந்த முறை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்து செய்துள்ளேன். மேலும் தொடர்ந்து செய் வேன். கடந்த தேர்தலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வருவதாக வாக்குறுதி குறித்து கேட்டதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தமிழ்நாடு அரசு இடம் துக்கியது.ஆனால் ஒன்றிய அரசு அதற்கு நிதியை ஒதுக்கவில்லை. இந்த முறை நான் வெற்றி பெற்றால் கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வருவதுதான் என் முதல் பணியாக இருக்கும் என்று கூறினார். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள திமுக மாநகர அலுவலக வாயி லில் அமைந்துள்ள பெரி யார், அண்ணா, கலைஞர், மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வல மாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனுத்தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்ட செயலா ளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி.ராமச்சந்திரன், செ.ஏகலைவன், வேலூர் வடக்கு, தெற்கு, காட்பாடி இடைக்கமிட்டி செயலா ளர்கள் கே.பாண்டுரங்கன், எஸ்.செல்வி, ஆர்.சுடரொளி யன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் டீக்கா ராமன், விசிக வேலூர் பிலிப், சிபிஐ லதா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பா ளர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் மருத்து வர் ஆர்.பசுபதி ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வே.ரா.சுப்பு லட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.