செங்கல்பட்டு, நவ. 6- நூறு நாள் வேலையில் பணி செய்த தொழிலாளர்க ளுக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய கூலி பாக்கி ரூ. 2696 கோடியை உடனடி யாக வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் பணி செய்த பணியாளர் களுக்கு கடந்த 3 மாதங்க ளாக கூலி வழங்கப்படாமல் உள்ளது. அதற்கான தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ. 2696 கோடி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பணியாளர்கள் பண்டிகை நாட்கள் வரும் நிலையில் கடுமையாக பாதி க்கப்பட்டுள்ளனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற இந்த ஒப்பாரி போராட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப் பாக்கம், கீழ்மருவத்தூர், அகரம், மருவளம், கள்ள பிரான்புரம், வள்ளுவப் பாக்கம், மூசிவாக்கம், கொளம்பாக்கம், பழைய னூர், அம்மனம்பாக்கம், கரு நீலம், கயநல்லூர், சித்தாத் தூர், சித்திரக்கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நடைபெற்றது. இப்போராட்டங்களில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் க.புருஷோத் தமன், பொருளாளர் வி.சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.