கடலூர்,டிச.11- சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, மனிதம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி வரவேற்றார். ‘மனித உரிமை மீறல்கள் தீர்வுகள்’ என்ற தலைப்பில் மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ‘மனித உரிமை வழக்குகள்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். சந்திரசேகரன், ‘அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி.ச.திருமார்பன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். இந்த கருத்தரங்கில் மீனவர் பேரவை யின் மாவட்டத் தலைவர் எம். சுப்பராயன், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நஸ்ருதீன், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலு. பச்சையப்பன், பொதுச்செயலாளர் பி. வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர். இளைஞர் அமைப்பின் ஆர். கோபிநாத் நன்றி கூறினார்.