districts

img

பழங்குடி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்வு விழா

செங்கல்பட்டு, அக்.26- கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு அரசு வழங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்வு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதி தையூர் கோமான் நகரில் படூர் மரவியாபாரி பாலு என்பவர் பழங்குடி இன இருளர் மக்களில் 8 குடும்பங்களை பல  ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்து  பல்வேறு வகையில் வன்கொடுமை செய்து  வந்துள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தை களை பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.பின்னர் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களை அரசு நிர்வாகம் மீட்டது. அவர் களுக்கு பாதுகாப்பும், சட்ட வழிகாட்டு தல்களையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் கண்காணிப்பகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வழிகாட்டியது. குற்றவாளி பாலுவும், அவருக்கு உடந்தையாக இருந்த மைக்கேலும் கைது  செய்யப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப் பட்ட பழங்குடி இன இருளர் மக்கள் சார்பாகவும் அமைப்புகளின் சார்பாகவும் மனுக்கள் கொடுக்கப்பட்டதின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரால் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள காயரம்பேடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் கொத் தடிமையாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடி மக்களை குடி அமர்த்த குடியமர்வு விழா புதனன்று  (அக் 25) மாதர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர். க.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் அகில இந்திய துணைச் செயலாளர். பி.சுகந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்டச்  செயலாளர். ப.சு.பாரதிஅண்ணா ஆகியோர்  ரிப்பன் வெட்டி புதுமனை குடியமர்வு விழாவில் கருத்துரை வழங்கினர். தீஒமு  மாவட்ட பொருளாளர் அ.ராமலிங்கம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர். க.புரு சோத்தமன், மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், மனித உரிமை செயற்பாட்டாளர்  அ.மேத்யு, பசித்தோர்க்கு உணவு வழங்கும் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.