districts

img

மக்கள் போராட்டத்தால் வீடுகளை கணக்கெடுக்கும் பணி நிறுத்தம்

சென்னை, ஆக. 18-   

       பொதுமக்கள் போராட்டத்தால் வீடுகளை கணக்கெடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

     கொளத்தூர் கங்கை அம்மன் கோவில் தெருவில் நீர்பிடிப்பு பகுதியில்  மக்கள் வசிப்பதாக கூறி அம்மக்களின் குடியிருப்பு களை அகற்றும் வகையில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் வெள்ளியன்று (ஆக. 19) கணக்கெடுக்க  வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

     மேலும் அங்குள்ள 5 நகர்களின் பொது நலச்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து கணக்கெடுக்கும் பணி தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது தாங்கள் குடியிருக்கும் இடத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதி காரிகள் உயர் அதிகாரிகளின் ஆலோச னைக்கு பிறகு தகவல் தெரிவிப்பதாக கூறி விட்டு சென்றனர்.

    இதில் தலைவர் பி.தேவராஜ், செயலாளர் எம்.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, கங்கை அம்மன் கோவில் நகர் செயலாளர் கணேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.