கும்மிடிப்பூண்டி அருகில் பெருவாயல் கிராமத்தில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளில் உள்ள பல்வேறு பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது. இந்த நிலையில் மதி என்பவரின் இசைக் கருவி தவில் நனைந்ததால் தவில் சேதமானது . இதனை சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், வட்டச் செயலாளர் இ.ராnஜந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் தமிழ்நாடு அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.