தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக ஓசூர் குணம் பன்னோக்கு மருத்துவமனையில் அதிநவீன 4 கே ஜெர்மன் கால் ஸ்டோர்ஸ் லேப்ராஸ்கோபி கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை மிக துல்லியமாகவும் குறைந்த நேரத்திலும் பக்க விளைவுகள் இல்லாமல் விரைவிலும் செய்ய முடியும். மேலும் விரைவில் வலி,சிரமங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என புதிதாக நிறுவப்பட்டுள்ள கருவி குறித்து அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் விளக்கினார். உடன் மருத்துவமனை இயக்குநர்கள் மருத்துவர்கள் செந்தில்,பிரதீப்குமார், பிரபுதேவா,கார்த்திக் பாண்டியன், ஓசூர் ரேமண்ட் ஷோரூம் உரிமையாளர் சீனிவாசன் சிஎன்சி நிர்வாக இயக்குநர் ரமேஷ்பாபு ஆகியோர் உள்ளனர்.