திருவண்ணாமலை,ஜன.11- திருவண்ணாமலை அடுத்த புனல காடு கிராமம் அருகே, தேவனந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் அங்கிருந்த மரம், செடி,கொடிகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. குப்பை கிடங்கு கிராம பகுதியில் அமைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அந்த பணி தொடர்ந்து நடந்தது. இத னால், அந்த இடத்தில் ஒன்று திரண்ட கிராம மக்கள், காஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை யினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை அடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், அசோகன், கிளைச் செய லாளர்கள் ராஜகோபால், காதர்அலி,குப்புசாமி உள்ளிட்டோர் மறியல் போராட்டம் நடத்திய மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல், வட்டாட்சி யர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலு வலர் அமிர்தராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அதுவரை குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் உறுதி மொழி விடுத்து அங்கிருந்த ஜேசிபி இயந்திரத்தை வெளியேற்றி எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே, இயற்கை காக்க சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது, காவல்துறை யினர் நடத்திய கொலை வெறி தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கை யில்,“திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை நகரை சுற்றி யுள்ள ஊராட்சிகளிலும் சேகர மாகும் குப்பைகளை, அந்தந்த ஊராட்சி பகுதிகளிலேயே தேக்கி வைக்கவேண்டும். அப்படி தேக்கி வைக்கப்படும் குப்பைகளை, மறு சுழற்சி மூலம், மக்க வைத்து மண்ணு டன் கலக்கும் உத்தியை கையாள வேண்டும். அத்தகைய உத்திகள் மூலம், குப்பைகள் மக்கவைக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு உரமாக மாற்றும் திட்டங்களும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுபெற்று வருகிறது. இதைவிடுத்து, நகர பகுதி களிலில் சேகரமாகும் அதிக அளவிலான குப்பைகளை, இயற்கை சூழலுடன் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிடங்கு ஏற்படுத்தி, அங்கு கொண்டு கொட்டுவது என்பது ஏற்புடையதல்ல” என்று கூறியுள்ளார். திருவண்ணாமலை அடுத்த கவுத்தி மலை அடிவாரத்தில் இருக்கும் இயற்கை சூழல் மிகுந்த புனல்காடு இருக்கும் இயற்கை சூழல் மிகுந்த புனல்காடு கிரலாமத்தில் குப்பை கிடங்கு அமைக்க முயன்றதை எதிர்த்தும் இயற்கையை காக்கவும் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம், கடமையை மறந்து கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறையை வன்மையாக கண்டிப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.