சென்னை மருத்துவமனையில் எச்ஐவி நோயாளி குணமடைந்தார்
சென்னை,செப்.2- எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட நெல்லூரைச் சேர்ந்த 33 வயது நபர் சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சையால் குணமடைந்தார். எச்ஐவி நோயில் இருந்து ஒரு உயிரை காப்பாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்த எச்ஐவி நோயாளியின் நிலை முதலில் கவலைக்கிடமாக இருந்தது. நோயாளி முதலில் கடுமையான சுவாச பிரச்சினைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இறுதியில் பிரசாந்த் மருத்துவமனை நிபுணர் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து சிறந்த சிகிச்சை அளித்ததன் மூலம் அவர் குணமடைந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பிரசாந்த் மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அஜித் குமார், நோயாளியின் சுவாச பிரச்சனையை சரி செய்ய சுவாச பாதை வழியாக ஹை ஃப்ளோ நாசல் கேனுலா (HFNC) மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுவாசத்தை வழங்கினோம். என்றார். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம், புர்கோல்டேரியா செபாசியா என்ற கிருமி ரத்தத்தில் இருப்பது பரிசோதனை யின் மூலம் தெரிய வந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அவருடைய உடல் நிலை மேலும் மோச மடைந்தது. சுவாசிக்க முடியாமல் போன தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப் படுத்த, துல்லியமான திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு போன்றவை நோயாளிக்கு தேவைப்பட்டது என்கிறார் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற எண்ணற்ற சிகிச்சை, சிக்கல்கள் மற்றும் சவால்கள் வரை, இந்தப் பயணம் மருத்துவர்களின் ஒத்துழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியை அடைந்துள்ளது என்று பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா கூறினார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
சென்னை,செப்.2- கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த வர் லட்சுமி நாராயணன் (வயது 21). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார். இவர் சனிக்கிழமை அதி காலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்ப ரான ரோகித் என்பவரு டன் மோட்டார் சைக்கி ளில் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டி ருந்தார். ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கி ளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்ட னர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரோகித் காயமடைந்தார்.
விஷ வண்டு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி
சென்னை, செப். 2- மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80 ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த மாதம் 31ஆம் தேதி திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் போது கதண்டு என்ற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்து திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்குசிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை (செப். 2) உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்த வீரமணியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன் என்று அதில் கூறியுள்ளார்.
ரேசன் கடை அமைக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை
வாலாஜாபாத், செப்.2- தமிழ்நாடு மின்சார வாரி யம் சார்பில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டையில் ரூ.40 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதற்கான தொடக்க விழா நடை பெற்றது. விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு புதிய டிரான்ஸ்பார்மர்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஏகனாம் பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதிக்கு வந்தபோது கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம் தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தற்போது தான் இந்த கோரிக்கை தமது கவனத்திற்கு வந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
மரங்களை வெட்ட மக்கள் எதிர்ப்பு
திருநின்றவூர், செப்.2- சென்னை வெளிவட்டச் சாலையில், திருநின்றவூர் புதுக்காலனி முதல் தாமரைப்பாக்கம் வரை யிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்காக சாலையின் இருமருங்கிலும் நன்கு வளர்ந்திருந்த 500க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை மாநில நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றி வருகின்ற னர். இவ்வாறு சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் சுமார் 50 முதல் 60 ஆண்டுகள் வயதுடையவை ஆகும். போக்குவரத்து நெரி சலைக் கட்டுப்படுத்த வெளி வட்டச்சலைகள் விரி வாக்கம் செய்யப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். இவ்வாறு சாலை விரிவாக்கத்திற்கு ஒரு மரம் வெட்டும்போது 10 மரக்கன்றுகள் நட வேண்டும். ஆனால் அப்படி நடப்படுவதில்லை. இந்நிலையில், திரு வள்ளூர் தெற்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றியம், கொமக்கம்பேடு ஊராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மரங்களை வெட்ட வேண்டாம் என கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆலோசனை
கள்ளக்குறிச்சி, செப்.2- வாக்குச்சாவடிகள் இரண்டாகப் பிரிப்பது புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடம் மாற்றும் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்.மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் தலைமையில் வாக்குச்சாவடி கள் இரண்டாக பிரிப்பது. புதிய வாக்குச்சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இட மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் செப்.1 அன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தெரி விக்கையில், இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி. ரிஷிவந்தியம், சங்கராபுரம். உளுந்தூர் பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதியில் உள்ள 1.274 வாக்குச்சாவடி மையங்களில். வாக்காளர்களின் எண்ணிக்கை 1.500க்கும் மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது. புதிதாக வாக்குச் சாவடி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி இடம் மாற்றம்.கட்டிடம் இடமாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடை பெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்துக்களையும். ஆலோசனைகளையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரி வித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ்.கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா. திருக்கோவிலூர் வரு வாய் கோட்டாட்சியர் கண்ணன்.தனி வட்டாட்சியர் தேர்தல் விஜயபிரபாகரன். வருவாய் வட்டாட்சியர்கள்.தேர்தல் துணை வட்டாட்சியர்கள். அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஸ்மார்ட்போன் புகைப்பட விருதுகள் போட்டி
சென்னை, செப்.2- உலக அளவில் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் ‘விவோ இமேஜின் ஸ்மார்ட்போன் புகைப்பட விருதுகள்’ போட்டியை அறிவித்துள்ளது. புகைப்படம் எடுக்கும் இந்தப் போட்டி யானது ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுப்பதை வளர்ப்பதற்கும், அதன் சிறப்பான செயல்திறன்களை வெளிப்படுத்தும் வகை யிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் போட்டியானது 6 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது அவை இயற்கை, உருவப்படம், இரவு நேரப் படங்கள், மோஷன் படங்கள், கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த வையாகும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து புகைப்படங்களை எடுக்கும் போட்டியாளர்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படு வார்கள்.
தங்கத்தின் விலை உயர்வு
சென்னை,செப்.2- சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (செப். 2) ரூ. 5,545 ஆக விற்பனையானது. வெள்ளிக் கிழமை ரூ.5,535 ஆக இருந்தது. அதேபோல 8 கிராம் தங்கத்தின் விலையும் ஏற்றத்துடன் 44,360 ரூபாய்க்கு விற்பனை யானது. தூய தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து 6015 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போல ஒருசவரன் தங்கத்தின் விலையும் 120 ரூபாய் உயர்ந்து 48,120 ரூபாய்க்கு விற்பனையானது.
ஐக்யூஓஓ நிறுவனத்தின் புதிய போன்
சென்னை, செப்.2- ஐக்யூஓஓ நிறுவனம் இசட் மாடல் வரிசையில் தனது புதிய இசட்7 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் செப். 5 ஆம் தேதி நள்ளி ரவு 12 மணி முதல் அமே சான்.இன் மற்றும் ஐக்யூ ஓஓ இ–ஸ்டோரில் கிடைக்கும். இதன் விலை ரூ.21,999 ஆகும். இதில் உள்ள 64எம்பி அவுரா லைட் ஓஐஎஸ் கேமரா தொழில்நுட்பம் சிறந்த புகைப்பட அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இதன் விலை ரூ.23,999 ஆகும். அறிமுக சலுகையாக ரூ,21,999க்கும், மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டின் விலை ரூ.24,999 ஆகும். இது சலுகை விலையில் ரூ.22,999–க்கு விற்பனை செய்யப்படுகிறது.