districts

img

பட்டா கோரிக்கை நிறைவேறியது!

கிருஷ்ணகிரி,மார்ச்.14- சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகே ஒபேபாளையத்தில் 15 ஆண்டு களுக்கு மேலாக வசித்து வரும் மலை வாழ் மக்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக புதனன்று ஓபே பாளையம் மலைவாழ் மக்கள் 8 குடும்பங்களுக்கும் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முரு கேசன், வட்டக் குழு உறுப்பினர் நாராயணப்பா,மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் குண்டப்பா ஆகியோர் உடன் இருந்த னர். இதனை அடுத்து ஓபேபாளையம் கிராமத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், வட்டக் குழு உறுப்பினர் விஜயகுமார் மலை வாழ் மக்கள் சங்க வட்டத் தலைவர் குண்டப்பா முன்னிலையில்  பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு  பட்டாக்கள் கிடைத்திட காரணமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும்  பயனாளிகள் நன்றி தெரி வித்தனர். மேலும் ஓபேபாளையம் கிராமத்தை ஒட்டியுள்ள இப்பகுதியில் குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைவசதிகளை செய்துதர வேண்டும் என வட்ட, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.