districts

img

நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

திருவண்ணாமலை,அக்.25- திருவண்ணாமலை போளூர் சாலை யில் உள்ள  ஈசானிய மைதானத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் உண்ணா நிலைப் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் மா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சிங்கராயன் வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச் செயலாளர் அம்சராஜ், நிர்வாகிகள் மகாதேவன் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் பார்த்திபன்,சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணா துரை, வழக்கறிஞர் அபிராமன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். நெடுஞ்சாலைத்துறை சாலை பணி யாளர் உண்ணாநிலைப் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா.பாரி, தமுஎகச நிர்வாகி ந.முத்துவேலன், அரசு துறைவாரி சங்க நிர்வாகிகள் க.பிரபு, பரிதிமாற் கலைஞன்,  எம்.மாரியப்பன், பிரபு, ஏ.சேகர், மா.மணி, சி.சுப்பிரமணியன், எம்.சுதாகரன், சி.ரகுபதி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். முடிவில் மாநில பொருளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.    சாலை பணியாளர்கள் 41 மாத கால பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்காக காலி பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும்,  பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இந்த உண்ணா நிலைப் போராட்டத்தை துவக்கியபோது, அனு மதியில்லை என்று நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.  அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில பொதுச் செய லாளர், “நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் குடும்பங்களை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோர் கவனத்தை ஈர்ப்பதற்காக தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது” என்றார். அதைத்தொடர்ந்து, காவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.