districts

img

வங்கி கடன், மானிய படிவம் வழங்குக

 திருவள்ளூர், டிச .12- தாட்கோ வங்கிகடன் மற்றும் மானியம் கிடைக்க படிவம் 3 வழங்க திருவள்ளூரில் உள்ள பரோடா வங்கி கிளை மேலாளர் அனு மதி வழங்க வேண்டும் என  தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர், நேதாஜி சாலையில் ஜமுனா என்பவர் வாடகை வீட்டில்  குடும்பத்து டன் வசித்து வருகின்றனர். இந்து அருந்ததி யர் வகுப்பைச் சேர்ந்தவர். திருவள்ளூர் சேலை ரோட்டில் உள்ள கடை வைத்து கணவருடன் காலணி தைக்கும் தொழில்  செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன்,  10 ஆம் வகுப்பு  வரை படித்து வேலை யின்றி இருக்கின்றார். ஜமுனாதான் செய்யும் தொழிலை மேம்படுத்த வங்கி கடன் வேண்டி  திருவள்ளூரில் உள்ள பரோடா வங்கியில் மனு செய்துள்ளார். கடந்த 2022 ஆகஸ்டில் திருவள்ளூரில் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றுள்ளது. அதில் ஜமுனா கலந்து கொண்டார். மேலும் கடந்த  18.04.2023 அன்று சென்னை கோட்டூர் புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கி கடன் இணைப்பு விழாவிற்கு அழைக் கப்பட்ட ஜமுனாவுக்கு  கோம்போட் பலகை யில் (மாதிரி காசோலை) ரூ. 5 லட்சம் கொண்ட அட்டை மட்டும் வழங்கினர். ஆனால்  இது வரை வங்கி கடன் வழங்கவில்லை. நேரில் சென்று பலமுறை  பரோடா வங்கி  கிளை மேலாளரை லோன் வழங்க வேண்டும்  என கேட்டுள்ளார்.  லோன் வழங்கப்படும் என உறுயாக பதில் சொல்லவில்லை. மேலும் பரோடா திருவள்ளுர்  கிளை மேலாளர் தாட்கோ மானியம் கிடைக்க வழங்க  வேண்டிய படிவம் 3 இதுவரை வழங்காத தால்,   ஜமுனாவுக்கு தாட்கோ மூலம் கிடைக்க  வேண்டிய வங்கி கடன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அருந்ததியர் ஜமுனாவுக்கு உடனடியாக வங்கி கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி திங்களன்று (டிச 11),  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  அலுவல கத்தில் குறை தீர்க்கும் முகாம்களில் மனு  அளித்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை, மாவட்ட குழு உறுப்பினர் அற்புதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.