சிதம்பரம், ஏப்.27- சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமையில் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி யின நல அலுவலர் லதா, மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், நந்தன ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஒருங்கி ணைப்பாளர் பூங்குழலி, பள்ளித்துணை ஆய்வாளர் வாழ்முனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.