சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று (நவ.22) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் சங்கத்தின் தலைவர் ஏ.சுப்பிரமணி, துணைத்தலைவர்கள் ஏ.வில்சன் ஆசீர்வாதம், ஆர்.ராம்ஜி, செயலாளர் டி.ரமேஷ்குமார், பொருளாளர் கே.அனந்த குமார், செயற்குழு உறுப்பினர்கள் மூத்த பத்திரிகையாளர் ஆவுடையப்பன்,பால சரவணன்,சிவக்குமார், சே.ப.தேவேந்திரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்பி ஆகியோர் உள்ளனர்.