புதுச்சேரி,ஜன.8- புதுச்சேரியில் தொடர் மழையால் கிராமங்களில் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்துள்ளது. அறு வடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளன. பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், கரிய மாணிக்கம், திருக்கனூர், கோர்க்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர், ஒரு சில பகுதிகளில் மணிலா பயிரும் நீரில் மூழ்கி யுள்ளன. சுமார் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித் துள்ளனர். முதல்வர் ஆய்வு இத்தொடர் மழையால் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் கட்டுமான தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பூமியான்பேட்டை பகுதி மக்களை முதல்வர் ரங்க சாமி நேரில் சந்தித்து குறை களை கேட்டறிந்தார். அப்போது அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறு முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமி காந்தனுடன் சென்று கரிக் கலாம்பாக்கத்தில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை பார்வை யிட்டார். நீர் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற் றாததால் நீர் வெளியேற முடி யாமல் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறி னர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் கூறுகையில் , “சேதமடைந்த விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப் படும். முதல்வருடன் பேசி நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மழைக் காலத் துக்கு முழுமையாக ஆக்கிர மிப்புகளை அகற்றி வாய்க் கால்கள் வழியாக மழைநீர் வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.