ராணிப்பேட்டை, செப். 26 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் அரசு மதுபான கிடங்கு கள் முன்பு கூலி உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சுமைப்பணி தொழி லாளர் சங்க செயலாளர் வி.பாலாஜி தலைமையில் செவ்வாயன்று (செப். 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் என். ரமேஷ், ஆட்டோ சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே. ரமேஷ், ராணிப்பேட்டை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஹரி, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். ஏற்றுக்கூலி தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய வேண்டும். குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்கு கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும். இறக்க கூலி உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் உடனே தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வேலூர் வேலூர் மாவட்ட சுமைப்பணி தொழி லாளர் சங்கம் சார்பில் நேஷனல் சர்க்கிள் அருகில் உள்ள சேமிப்பு கிடங்கு அலுவலகம் முன்பு மாவட்டப் பொரு ளாளர் பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பி.மணி முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் பி.ஆனந்தன், சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் வி.நாகேந்திரன், துணைத் தலைவர் எம்.காசி மற்றும் பலர் உரையாற்றினர்.