பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4 வார்டு, ஜோதி நகரில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஞாயிறன்று (ஏப். 9) ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் பொது ராஜேந்திரன், வடக்கு பகுதி துணை ஆணையர் சிவகுரு பிரதாபன், மண்டல அலுவலர் ந.சங்கரன், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.