சென்னை,அக்.24- நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி. ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரை யாற்றினார். டாக்டர் ராமமூர்த்தி மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறை யும் அதிகமாக இருந் தது. இருசக்கர வாகனங்க ளில் அதிவேக பய ணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரி ழப்பையும் சந்தித்து வரு வதை அறிந்து, தலைக் கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல மைச்சர் கலைஞரிடம் வீட்டிற்கே வந்து வாதாடிய வர் ராம்மூர்த்தி என்றும் அவர் கூறினார். மிகப் புகழ்வாய்ந்த, நாட்டுப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த ராம மூர்த்தி தனக்கெனத் தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தோடு, அதில் தனிச் சிறப்பான இடத்தை தனக் கென உருவாக்கிக் கொண்ட வர். உயிர்காக்கும் துறை யான மருத்துவத்துறையில், நரம்பியல் துறை வல்லு நராக – இந்தியாவின் முக மாகவே உலகம் முழுதும் அறியப்பட்ட சிறப்புக் குரியவர் டாக்டர் ராம மூர்த்தி என்றும் முதல்வர் குறிப்பிட்டார். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம் என்றும் முதல்வர் தெரி வித்தார். இந்த நிகழ்ச்சியில் நியுரோ சயின்ஸ் இயக்கு நர் டாக்டர் கே. ஶ்ரீதர், பேராசிரியர் அனில் நந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.